நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் புதிய அதிபர் இன்று (07.09.2014)பதவியேற்பு
நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக திரு.குழந்தைவேலு ரவிச்சந்திரன் இன்று (07.09.2014)பதவியேற்றுள்ளார்.காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னைநாள் அதிபர் திரு.செ.பத்மநாதன் அவர்கள் தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் புதிய அதிபரிடம் கையளித்தார். பாடசாலையை நல்லதொரு பாதையில் வழிநடாத்தி ஒழுக்கம் கல்வி அபிவிருத்தி என்பவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி சாதனை நிகழ்த்திவிட்டு இன்று 07.09.2014 தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறும் பெருமரியாதைக்குரிய அதிபர் திரு.செ.பத்மநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இனிய பிறந்ததின வாழ்த்துக்களையும் எமது இணையம் தெரிவித்துக்கொள்கிறது.அத்துடன் புதிய அதிபர் திரு.கு.ரவிச்சந்திரன் அவர்களை எமது ஊரவர்கள் சார்பாகவும் இணையம் சார்பாகவும் வரவேற்கின்றோம்.
Nice photos of handover to the new Principal. Best wishes to outgoing principal & the incoming principal.
welcome new principal and very good bye to outgoing principal Pathmanathan for his excellent perfomance
kind regards
Kankesan