அரசகேசரிப் பிள்ளையாரில் திருநாவுக்கரசு நாயனார் திருநாள்
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் முன்னெடுக்கும் திருநாவுக்கரசு நாயனார் திருநாள் நிகழ்வுகளும் ஸ்ரீ கணேச அறநெறிப் பாடசாலையின் 14 ஆவது ஆண்டு பரிசில் நாளும் 12.05.2015 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.தகைசார் வாழ்நாள் பேராசிரியரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவருமாகிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் தொழிலதிபர் க.கிருபாகரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றுவர். நீர்வை மணி கு.தியாகராசக் குருக்கள் ஆசியுரையையும் இந்து காலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மகிந்தினி விஜயகுமார் வாழ்த்துரையையும் வழங்குவர். “மின்னம்பலத்தில் நாவுக்கரசர்’ என்ற பொருளில் மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் சிறப்புரையைத் தொடர்ந்து பன்முக நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் கருத்தரங்கு இடம்பெறும். இதில் பக்தி நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசனும் இலக்கிய நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் விரிவுரையாளர் கு.பாலஷண்முகனும் பண்பாட்டு நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் கலாநிதி மனோன்மணி சண்முகதாசும் கருத்துரைகளை வழங்குவர்.
0 Comments