நீர்வேலி தெற்கில் புதிய உதயம்- சேதன மரக்கறி(organic vegetables)
நீர்வேலி தெற்கு -ஸ்ரீ மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் சேதன மரக்கறி(organic vegetables) விற்கும் கடை திருமதி ருக்மணி ஆனந்தவேல் அவர்களால் 27.01.2020 அன்று மாதர்சங்க முன்றலில் திறக்கப்பட்டது. தற்காலத்தில் மருந்து கல்ந்த மரக்கறியினை பயன்படுத்துவதால் கொடிய நோய்கள் ஏற்பட்டு பல தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளனர். இந்நிலையில் சேதன மரக்கறி(organic vegetables) விற்கும் கடை எமது பிரதேசங்களிற்கு அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. மேற்படி முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். தொடர்ச்சியாக பல காலம் தொடரவேண்டும்.
0 Comments