நீர்வேலி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் உயரிய பங்களிப்பு வழங்கும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளை
நீர்வேலி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் உயரிய பங்களிப்பு வழங்கி வருகின்றனர் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளையினர்.எமது ஊரைச்சேர்ந்த இலண்டனில் வதியும் அன்பர்கள் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளையினரிடம் பெருமளவு நிதியினை வழங்கிவருகின்றனர்.இவர்களின் நல் மனப்பாங்கிற்கு நீர்வேலியின் அனைத்து கல்விசார் சமூகத்தினரும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.தற்போது கூட நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் அதிபர் அலுவலகம் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளையினரின் நிதி 16 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுவருகிறது.இதுபோல நீர்வேலி வடக்கு R C T M பாடசாலையில் மண்டபப்புனரமைப்பிற்கு நிதிசேகரிப்பில் நலன்புரிச்சங்கம் ஈடுபட்டுள்ளது.
நீர்வேலி வடக்கு R C T M பாடசாலைக்கு பெருமளவு நிதி தேவைப்படுவதால் நன்கொடையாளர்கள் இந்த முயற்சிக்கு நிதியினை வழங்கி ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமாறு கேடடுக்கொள்ளப்படுகின்றனர்.நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளையினரின் இந்த முயற்சிக்கு நிதியுதவிசெய்ய முன்வந்த நன்கொடையாளர்களின் விபரம் வருமாறு.
திருமதி கமலா சுப்பிரமணியம் 1000 பவுண்ஸ்
திருமதி .C.ஜெயசுந்தரகுமார் 250 பவுண்ஸ்
திருமதி M.கமலநாதன் 250 பவுண்ஸ்
திரு.M. திருவாசகம் 250 பவுண்ஸ்
திரு.S.செல்வநாதன் 250 பவுண்ஸ்
திரு.S.சுபேஸ்குமார் 250 பவுண்ஸ்
திரு.M.யோகராஜா 150 பவுண்ஸ்
திரு.B.குணாளன் 150 பவுண்ஸ்
திரு.N.இராஜேந்திரன் 150 பவுண்ஸ்
திரு.N.நகுலேஸ்வரன் 150 பவுண்ஸ்
திரு.P.சிவரூபன் 150 பவுண்ஸ்
திரு.V.காங்கேசன்(டென்மார்க்) 50 பவுண்ஸ்
திரு.சதீஸ் 150 பவுண்ஸ்
மேலும் இத்திட்டத்திற்கு உதவிசெய்யவிரும்புபவர்கள் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளையினரிடம் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பகின்றனர்.
திரு.மா.திருவாசகம் (தலைவர்) 0044 07966580977
திரு.செ.சுபேஸ்குமார் (பொருளாளர்) 0044 079 49234935
திரு.செ.செல்வநாதன் (செயலாளர்) 0044 07807784478
கடந்த 15 வருடங்களாக நீர்வேலியில் உள்ள எல்லாப்பாடசாலைகளின் முன்னேற்றத்துக்கும் பெரும்உதவிசெய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.
0 Comments