[:ta]நீர்வேலி வடக்கு மோதிரக்கேணி வீதி புனரமைக்கப்படுகிறது[:]
நீர்வேலி வடக்கு #மோதிரக்கேணி– செல்லக்கதிர்காம கோவில் 658 மீற்றர் நீளமான வீதி நீண்ட காலத்தின் பின்னர் வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைப்பு பணிகள் இடம்பெறுகிறது.
இவ்வீதி குன்றும் குழியுமாக கல்வீதியாக ஒடுங்கிய நிலையில் காணப்பட்டதுடன் பலமுறை வீதியை புனரமைக்குமாறு கோரப்பட்டது. இந்நிலையில் தற்போது இவ்வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெறுகிறது வீதியின் ஒடுங்கிய பகுதியில் இருந்த நிலையில் வீதியோரமாகவுள்ள குடியிருப்பாளர்களுடன் வலி.கிழக்கு பிரதேச தொழில்நுட்ப அதிகாரிகள்(TO) பேசி வேலிகள், மதில்கள் பின்நகர்த்தப்பட்டு அகன்ற வீதியாக புனரமைக்கப்படுகிறது.
இவ்வீதி புனரமைக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
0 Comments