பாலர் பகல் விடுதியின் வருடாந்த பொதுக்கூட்டம் -2015
நீர்வேலி சமுதாய முன்னேற்றக் கழகம் -பாலர் பகல் விடுதியின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் 26.04.2015 மாலை 4.00 மணிக்கு பாலர் பகல் விடுதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தலைவர் திரு செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்
• இறைவணக்கம்
• தலைமையுரை
• சென்றவருட பொதுக்கூட்ட அறிக்கை வாசித்தல்
• செயற்பாட்டு அறிக்கை வாசித்தல்
• கணக்கறிக்கை சமர்ப்பித்தல்
• பிரேரணைகள்(இருப்பின்)சமர்ப்பித்தல்
• புதிய நிர்வாகசபை தெரிவு
• வேறுவிடயங்கள்
• நன்றியுரை
குறிப்பு:-
1) பிரேரணைகள் சமர்ப்பிக்க விரும்புவோர் 16.04.2015 இற்கு முன் செயலாளருக்கு அனுப்பி வைக்கவும்
2)அங்கத்தவர்களாக சேரவிரும்புவோர் 25.04.2015 இற்கு முன் விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து செயலாளரிடம் சமர்ப்பிக்கவும்
-திரு.வே.குணசீலன் செயலாளர் பாலர்பகல் விடுதி நீர்வேலி
0 Comments