வருஷாபிஷேகப் பெருவிழா – விஜய வருஷாரம்பம் விசேஷ அபிஷேக ஆராதனை, வழிபாடு…
நாளை (11.04.2013, பங்குனி மாத அஸ்வினி நக்ஷத்திரம்) அன்று நீர்வேலி செல்லக்கதிர்காம ஸ்வாமிக்கும் பரிவார மூர்த்திகளுக்கும், கும்பாபிஷேக தினமாகிய வருஷாபிஷேக விழாவை (மணவாளக்கோலம்) முன்னிட்டு, அதிகாலை தொடக்கம் விசேஷ சங்காபிஷேகம், மஹாதீபாராதனை, டோலோத்ஸவம், உத்ஸவம், என்பன இடம்பெறும்.. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்..
நாளை மறுதினம் மாலையில், கந்தரனுபூதி பாராயணமும் விசேடபூஜையும்,
13.04.2013 சனிக்கிழமை பகல் (பங்குனி மாத கிருத்திகை நக்ஷத்திரம்) ஷண்முகநாத ஸ்வாமிக்கு சங்காபிஷேகம், தீபாராதனை, உத்ஸவம் இடம்பெறும்..அன்று நள்ளிரவு 12.00மணி (அதாவது ஆங்கிலப்படி 14ஆம் திகதி 12.00மணி) விஜய வருஷாரம்பம் விசேஷ அபிஷேக ஆராதனை, வழிபாடு…
“கதிர்காமக் கந்தன் பாதம் கனவிலும் காத்து நிற்கும்..”
0 Comments