காலத்தால் அழியாதவை
அச்செழு நீர்வேலி குறுக்கு வீதியில் அச்செழு பிரதான நாட்சந்தியில் இருந்து கரந்தன் ஞானவைரவர் வீதியை இணைக்கின்ற 2km நீளத்தினைக்கொண்டுள்ள வீதியானது #100000Km காபெட் இடும் திட்டத்தில் #கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் #யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டு காபெட் இடப்படவுள்ளது இதற்கான அடிக்கல் நாட்டுவைபவம் 29.11.2020 அன்று இடம்பெற்றது இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் தந்தையார் சதாசிவம் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டு இவ்வீதிக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சிறிலங்கா சுதந்திர கட்சியின் கோப்பாய்தொகுதி இணைபாளர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் கிராமவாழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் வாசிக்க
இஞ்சி, சுக்கு, கடுக்காய், உண்ணும் முறை
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே.
சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.
சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.
சுமார் 35 வருடங்களின் பின்னர் தற்பொழுது புனரமைக்கப்பட்ட நீர்வேலி குறுக்கு வீதியானது புதுப்பொலிவுடன் காணப்படுகின்றது. புனரமைப்பதற்கு முன்பு மேற்படி வீதியால் சென்ற மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.இதனை புனரமைக்க அயராது பாடுபட்ட முன்நின்று உழைத்த அத்தனை உத்தியோகத்தர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.இவர்களை நீர்வேலி குறுக்கு வீதியால் பயணிக்கும் ஒவ்வொருவரும் நன்றியுடன் நினைவு கூர்வார்கள் மேலும் வாசிக்க